தேசிய செய்திகள்

அஜித் தோவலுடன் வங்காளதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

வங்காளதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரஹ்மான் இந்தியா வந்துள்ளார்

தினத்தந்தி

டெல்லி,

தலைநகர் டெல்லியில் இன்று 7வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை உள்பட பல்வேறு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதனிடையே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாட்டில் பங்கேற்கும்படி வங்காளதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரஹ்மானுக்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், அஜித் தோவலின் அழைப்பை ஏற்று வங்காளதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரஹ்மான் இன்று இந்தியா வந்தார். அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாட்டில் பங்கேற்றார்.

இந்த மாநாட்டின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை வங்காளதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் கடந்த சில மாதங்களாக விரிசல் நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில் அவருக்கு வங்காளதேச கோர்ட்டு மரண தண்டனை விதித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் அஜித் தோவலுடன் வங்காளதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரஹ்மான் மேற்கொண்ட சந்திப்பு பேசுபொருளாகியுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து