தேசிய செய்திகள்

26, 27-ந் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

26, 27-ந் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிராகவும், மேலும் சில கோரிக்கைளை வலியுறுத்தியும் வருகிற 26 மற்றும் 27-ந் தேதிகளில் நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அதிகாரிகள் சங்கம் சார்பில் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தது.

இதைத்தொடர்ந்து வங்கி ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று இந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் சங்கங்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், 10 பொதுத்துறை வங்கிகளை இணைப்பதால் எழும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைப்பதற்கு நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் ஒப்புக்கொண்டு உள்ளார். நிதித்துறை செயலாளரின் இந்த நேர்மறையான மற்றும் சாத்தியமான தீர்வை தொடர்ந்து, 26 மற்றும் 27-ந் தேதிகளில் மேற்கொள்ள இருந்த 48 மணி நேர வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுகிறது என்று கூறப்பட்டு உள்ளது.

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதால் 26 மற்றும் 27-ந் தேதிகளில் வங்கி பணிகள் பாதிப்பின்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்