தேசிய செய்திகள்

சீன அதிபரை வரவேற்று பேனர்: ஐகோர்ட்டு அனுமதிக்கு எதிரான மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க ஐகோர்ட்டு கொடுத்த அனுமதிக்கு எதிரான மனுவினை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, சீன அதிபர் ஜின்பிங்கின் வருகையை ஒட்டி, அவரை வரவேற்று பேனர் வைக்க சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் 3-ந் தேதி அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் வக்கீல் ஜி.எஸ்.மணி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜி.எஸ்.மணி ஆஜரானார். விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், சீன அதிபர் இந்தியாவுக்கு வந்து திரும்பிச் சென்று விட்டார். மேலும் ஐகோர்ட்டு தீர்ப்பில் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பேனர் வைக்க அனுமதி வழங்கியதாக கூறப்பட்டு உள்ளது. எனவே இந்த மனு பயனற்றதாகி விட்டது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்