தேசிய செய்திகள்

காதல் தோல்வியால் தூக்குப்போட்டு பீகார் வாலிபர் தற்கொலை

சாகரில், காதல் தோல்வியால் தூக்குப்போட்டு பீகார் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

சிவமொக்கா;

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பக்திகுமார்(வயது 20). இவர், சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா குட்டேஆலஹள்ளி கிராமத்தில் அறை எடுத்து தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார். இந்த நிலையில் பக்திகுமார் தங்கி இருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதனால் அப்பகுதியினர், அறையின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது அறையில் பக்திகுமார், தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்த தகவலின் பேரில் சாகர் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

விசாரணையில், பக்திகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பக்திகுமாரின் உடலை, போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பக்திகுமார் கைப்பட எழுதிய கடிதம் சிக்கியது.

அந்த கடிதத்தில், காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்துகொள்வதாக கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து சாகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு