Image Courtesy : ANI 
தேசிய செய்திகள்

5 ஆயிரம் ஆண்டுகளாக 'பாரத்' ஒரு மதசார்பற்ற நாடாக இருந்தது - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

5 ஆயிரம் ஆண்டுகளாக ‘பாரத்’ ஒரு மதசார்பற்ற நாடாக இருந்தது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது அவர் பேசியதாவது;-

"தேசிய ஒருமைப்பாட்டை நமது தாய்நாட்டின் இன்றியமையாத அங்கமாக கருதுகிறோம். நமது 5,000 ஆண்டுகால கலாச்சாரம் மதசார்பற்றது. முன்னோர்கள் உலக நலனுக்காக 'பாரதத்தை' உருவாக்கினர். அவர்கள் தங்கள் அறிவை நாட்டின் கடைசி நபருக்கும் கடத்தும் ஒரு சமூகத்தை உருவாக்கினர்.

முழு உலகமும் ஒரே குடும்பம், இது எங்கள் உணர்வு. இது ஒரு கோட்பாடு அல்ல. அதை அறிந்து உணர்ந்து அதன்படி நடந்து கொள்ளுங்கள்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்