கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் போலீஸ் என்கவுண்ட்டரில் 2 நக்சலைட்டுகள் பலி

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில், போலீஸ் நடத்திய என்கவுண்ட்டர் தாக்குதலில் 2 நக்சலைட்டுகள் பலியாகினர்.

தினத்தந்தி

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் சத்தீஷ்கார் எல்லையையொட்டி அமைந்துள்ள மண்டலா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதனைத் தொடர்ந்து போலீசார் தங்களது துப்பாக்கியால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே விடிய விடிய துப்பாக்கிச் சண்டை நடந்தது.

நேற்று அதிகாலையில் இந்த துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்தது. இதில் ஒரு பெண் உள்பட 2 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை