தேசிய செய்திகள்

பீகாரில் பஸ்சும் டேங்கர் லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் பலி

பீகாரில் பஸ்சும் டேங்கர் லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.

தினத்தந்தி

பாட்னா,

பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த ஒரு திருமண விழாவில் கலந்துக்கொண்டுவிட்டு சிலர் பஸ்சில் சமஸ்திபூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பச்வாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராணி கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த பஸ்சும், பால் ஏற்றி வந்த டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து