தேசிய செய்திகள்

பீகார் சட்டசபை தேர்தல்; மதியம் 3 மணி நிலவரப்படி 45.85 சதவீத வாக்குகள் பதிவு

பீகார் சட்டசபை தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 45.85 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

தினத்தந்தி

பாட்னா,

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடந்து வருகிறது. முதல் மற்றும் 2-ம் கட்ட தேர்தல் முறையே கடந்த அக்டோபர் 28 மற்றும் நவம்பர் 3 ஆகிய நாட்களில் நடந்து முடிந்தது. 3-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.

78 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த 3-வது கட்ட

தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. 71 உறுப்பினர்களுக்கான முதற்கட்ட தேர்தலில் 55.69 சதவீதமும், 94 உறுப்பினர்களுக்கான 2-வது கட்ட தேர்தலில் 53.51 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகார் சட்டசபை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 34.82 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், மதியம் 3 மணி நிலவரப்படி 45.85 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என ஆணையம் தெரிவித்து உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்