கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

வினாத்தாள் கசிந்தது: பீகாரில் போலீஸ் தேர்வு ரத்து

பீகாரில் வினாத்தாள் கசிந்ததால் போலீஸ் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

தினத்தந்தி

பாட்னா,

பீகார் மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்காக 21,391 காலியிடங்களை நிரப்ப அரசு திட்டமிடப்பட்டது. இதற்காக பீகார் மத்திய காவலர்கள் தேர்வு வாரியம் சார்பில் கடந்த அக்டோபர் 1-ந் தேதி 37 மாவட்டங்களில் 529 மையங்களில் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

ஆனால் இந்த தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக இதுவரை 21 மாவட்டங்களில் மொத்தம் 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மற்றும் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக 148 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக பீகார் மத்திய காவலர்கள் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து