தேசிய செய்திகள்

பீகாரில் மொபைல் கேமால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து மொபைல் கேம் விளையாடிக்கொண்டிருந்த 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

பாட்னா,

பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் 3 இளைஞர்கள் ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து மொபைல் கேம் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் அவர்கள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த இளைஞர்கள் காதில் ஹெட்போன் அணிந்திருந்ததால் ரெயில் அருகே வருவதை கவனிக்க தவறியுள்ளனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயிரிழந்தவர்கள் புர்கான் ஆலம், மன்ஷா தோலா, சமீர் ஆலம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்