தேசிய செய்திகள்

3 டெல்லி மாநகராட்சிகளை இணைக்கும் மசோதா - மத்திய மந்திரிசபை ஒப்புதல்

3 டெல்லி மாநகராட்சிகளை இணைக்கும் மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி மாநகராட்சி கடந்த 2011-ம் ஆண்டு, வடக்கு மாநகராட்சி, தெற்கு மாநகராட்சி, கிழக்கு மாநகராட்சி என மூன்றாக பிரிக்கப்பட்டது. அப்போதிலிருந்து, 3 மாநகராட்சிகளும் பா.ஜனதாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றன.

3 மாநகராட்சிகளிடையே வருவாயில் ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. வார்டுகளும் சமமாக பிரிக்கப்படவில்லை. நிதி தட்டுப்பாடு காரணமாக, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை காணப்படுகிறது.

இந்நிலையில், 3 மாநகராட்சிகளையும் மீண்டும் ஒன்றாக இணைப்பதற்கான டெல்லி மாநகராட்சி திருத்த மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது. ஒன்றாக இணைப்பதன் மூலம், பா.ஜனதா-ஆம் ஆத்மி இடையிலான அரசியல் மோதல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு