தேசிய செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது ராமர் கோவில் கட்ட மசோதா நிறைவேற்றப்படும் - விசுவ இந்து பரிஷத் நம்பிக்கை

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது, ராமர் கோவில் கட்ட மசோதா நிறைவேற்றப்படும் என விசுவ இந்து பரிஷத் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

விசுவ இந்து பரிஷத் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்யக்கோரி, அனைத்து கவர்னர்களிடமும் மத, சமூக அமைப்புகள் மனு கொடுத்துள்ளன. அனைத்து எம்.பி.க்களிடமும் ஆதரவு கேட்போம். எனவே, மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம். கட்சி வேறுபாடுகளை கடந்து, எதிரணி தலைவர்களும் அதை ஆதரிப்பார்கள்.

ராமர் கோவில் கட்ட வற்புறுத்தி, வருகிற 25-ந் தேதி, அயோத்தி, நாக்பூர், பெங்களூரு ஆகிய நகரங்களில் துறவிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும். டெல்லியில், டிசம்பர் 9-ந் தேதி பிரமாண்ட கூட்டம் நடைபெறும் என்று அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை