தேசிய செய்திகள்

நடுவானில் விமானத்தின் மீது மோதிய பறவை: அவசரமாக தரையிறக்கம்

விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை அவசரமாக நாக்பூரில் தரையிறக்கினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மராட்டிய மாநிலம் நாக்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா 466 ரக விமானம் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு டெல்லிக்கு புறப்பட்டது. அப்போது நடுவானில் பறந்த சிறிது நேரத்தில் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியதால் கோளாறு ஏற்பட்டது.

இதையறிந்த விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை அவசரமாக மீண்டும் நாக்பூரில் தரையிறக்கினார். இதனால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் விமான ஊழியர்கள் வந்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்