தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலத்தில் கொரோனா பரிசோதனைகளில் ரூ.270 கோடி மோசடி நடந்துள்ளதாக பா.ஜனதா குற்றச்சாட்டு

மராட்டிய மாநிலத்தில் கொரோனா பரிசோதனைகள் மூலம் ரூ.270 கோடி மோசடி நடந்துள்ளதாக பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தில் தனியார் ஆய்வகங்களுக்கும் பொது மக்களுக்கு கொரோனா பரிசோதனை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.270 கோடி மோசடி நடந்து உள்ளதாக சட்டமேலவை எதிர்கட்சி தலைவர் பிரவின் தரேக்கர் (பா.ஜனதா) குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு ஆர்.டி.-பி.சி.ஆர். கொரோனா சோதனைக்கு ரூ.1, 700 கட்டணமாக நிர்ணயித்தது. ஆனால் மராட்டியத்தில் தனியார் ஆய்வகங்களில் சோதனை செய்ய ரூ.1,900 முதல் ரூ.2,200 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த மாதம் 19-ந் தேதி கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.795 என மத்திய அரசு நிர்ணயம் செய்து உள்ளது. ஆனால் மராட்டிய தனியார் ஆய்வகங்களில் ரூ.1,256 வரை அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கொரோனா சோதனை விவகாரத்தில் ரூ.270 கோடி வரை மோசடி நடந்து உள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு