தேசிய செய்திகள்

ரஞ்சித் சிங் சிலை உடைப்புக்கு கண்டனம்; பாகிஸ்தான் தூதரகம் முன்பு பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தான் லாகூர் கோட்டையில் உள்ள சீக்கிய பேரரசர் ரஞ்சித் சிங்கின் சிலை உடைக்கப்பட்டது. அதைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

அப்போது பேசிய டெல்லி பா.ஜ.க. தலைவர் ஆதேஷ் குப்தா, பாகிஸ்தானில் நடைபெற்றிருக்கும் பேரரசர் ரஞ்சித் சிங் சிலை உடைப்பு சம்பவம், அவர்களின் தலீபான் மனோபாவத்தை வெளிப்படுத்துகிறது. அதை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்.

பாகிஸ்தானின் இந்த மனோபாவம் தொடர்ந்தால், அந்த நாட்டின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர், விரைவில் இந்தியாவின் அங்கமாகும். பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கத்தான், மோடி அரசு துல்லியத் தாக்குதலை நடத்தியது என்ற கூறினார். பா.ஜ.க. போராட்டத்தையொட்டி டெல்லி பாகிஸ்தான் தூதரகம் முன்பு நேற்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு