கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

29-ந் தேதி தவறாமல் சபைக்கு வருமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு

29-ந் தேதி தவறாமல் சபைக்கு வருமாறு பா.ஜனதா எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 23-ந் தேதிவரை இத்தொடர் நடக்கிறது.

இந்தநிலையில், முதல் நாளான 29-ந் தேதி, மாநிலங்களவை கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு மாநிலங்களவை பா.ஜனதா எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

29-ந் தேதியன்று, சபையில் சில மிக முக்கிய அலுவல்கள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளதால், சபையிலேயே இருக்குமாறு பா.ஜனதா கொறடா சிவபிரதாப் சுக்லா, தனது உத்தரவில் கூறியுள்ளார். 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா, சபை அலுவல் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது