தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மார்ச் மாதம் பாஜக ஆட்சி அமைக்கும்: மத்திய மந்திரி கருத்தால் பரபரப்பு

வரும் மார்ச் மாதத்திற்குள் மராட்டியத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று மத்திய மந்திரி நாரயண் ரானே தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டியத்தில் கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றன. இந்த நிலையில், வரும் மார்ச் மாதத்திற்குள் மராட்டியத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று மத்திய மந்திரி நாரயண் ரானே தெரிவித்துள்ளார்.

மராட்டிய பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் பிராபுல் படேல் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், நாராயண் ரானேவின் இந்த கருத்து பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.

மத்திய மந்திரி நாராயண் ரானேவின் கருத்து பற்றி மராட்டிய பாஜக தலைவர்களில் ஒருவரான சந்திரகாந்த் பாடீலிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சந்திரகாந்த் பாட்டீல், நாராயண் ரானேவின் கருத்து உண்மையாகும் என நம்புகிறேன் என்றார்.

அதேவேளையில், காங்கிரஸ் கட்சி இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மராட்டியத்தில் மாகா விகாஸ் கூட்டணி 5 ஆண்டுகளையும் நிறைவு செய்யும் எனவும், பாஜக தொடர்ந்து மிகப்பெரிய கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், அது உண்மையாக போவது இல்லைஎனத்தெரிவித்துள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு