தேசிய செய்திகள்

திரிபுரா சட்டசபை தேர்தல்: பாரதீய ஜனதா முன்னிலை தொண்டர்கள் கொண்டாட்டம்

திரிபுரா சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - பாரதீய ஜனதா மாறி மாறி முன்னிலை பெற்று வருகின்றன. பாரதீய ஜனதா தொண்டர்கள் கொண்டாட்டம். #TripuraElection2018

அகர்தலா

திரிபுரா சட்டசபை தேர்தலில் நொடிக்கு நொடி முடிவுகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி, பாஜக மாறி மாறி முன்னிலை வகிப்பதால் தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக உள்ளன.

திரிபுரா மாநிலத்தில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பாஜக கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்று பிரச்சாரம் செய்தது பாஜக, அமைதி வளர்ச்சிக்காக மக்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கே வாக்களிப்பார்கள் என்று இடது சாரி அமைப்புகள் பிரச்சாரம் செய்தன.

இன்று 59 தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதற்கட்ட நிலவரப்படி திரிபுரா சட்டசபை தேர்தல் முடிவில் மாற்றம் வந்து கொண்டே இருக்கிறது. முதலில் மார்க்சிஸ்ட் கட்சி முன்னிலை வகித்த நிலையில் அடுத்த சுற்றில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றது.

கடைசியாக கிடைத்த தகவல்படி இடது சாரி கட்சிகள் 27 இடங்களிலும், பாஜக கூட்டணி 32 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

திரிபுராவில் பாரதீய ஜனதா முன்னிலை என்ற தகவலை கேட்ட பாரதீய ஜனதா தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்