தேசிய செய்திகள்

மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்வு

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் பலம் 3 ஆக குறைந்துள்ளது

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மேல்சபை எம்.பி.க்கள் ராகவ் சத்தா, அசோக் மித்தல், சந்தீப் பாடக், ஹர்பஜன் சிங், ராஜேந்திர குப்தா, விக்ரம் சஹ்னி மற்றும் ஸ்வாதி மாலிவால் ஆகிய 7 பேர் பா.ஜனதாவில் இணைந்தனர். இந்த 7 எம்.பி.க்களும் தங்களை பா.ஜனதா எம்.பி.க்களாக கருத வேண்டும் என்று மேல்சபை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் கடந்த வெள்ளிக்கிழமை மனு அளித்திருந்தனர். கட்சி மாறிய 7 எம்.பி.க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மேல்சபை தலைவரும், துணை ஜனாதிபதியுமான சி.பி. ராதாகிருஷ்ணனிடம் ஆம் ஆத்மி கட்சி குழு தலைவர் சஞ்சய் சிங் மனு அனுப்பினார்.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.பி.க்கள் பா.ஜனதாவுடன் இணைவதை மேல்சபை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் பாஜகவின் பலம் ராஜ்யசபாவில் 113 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் பலம் 3 ஆக குறைந்துள்ளது