தேசிய செய்திகள்

பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு

பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மாநிலங்களவை தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

பீகார் மாநில முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவையடுத்து, மாநிலங்களவையில் ஒரு இடம் காலியானது. இதையடுத்து, போட்டியிட்ட சுஷில் குமார் மோடி போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.