தேசிய செய்திகள்

கொரோனா சிகிச்சை பெறும் நபருக்கு கருப்பு பூஞ்சை

உத்தரபிரதேசத்தில் காசியாபாத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நபருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

லக்னோ,

சமீப காலமாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் புதிய வகை கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில், உத்திரபிரதேசத்தில் காசியாபாத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

55 வயதான நபருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து மாதிரிகளை ஆய்வு செய்ததில் கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதியானது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து