கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் கருப்பு பூஞ்சை பாதிப்பு தொற்று நோயாக அறிவிப்பு

ராஜஸ்தானில் கருப்பு பூஞ்சை பாதிப்பு தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ஜெய்ப்பூர்,

கொரோனாவில் இருந்து மீண்டுவரும் நோயாளிகளை கருப்பு பூஞ்சை எனப்படும் ஒருவித நோய் பாதித்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. நீரிழிவு நோயாளிகள் இந்த தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இந்த பாதிப்பை தொற்றுநோயாக ராஜஸ்தான் அரசு நேற்று அறிவித்தது. அங்கு சுமார் 100 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மாநில அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

இந்த தகவலை மாநில சுகாதார முதன்மை செயலாளர் அகில் அரோரா வெளியிட்டார். இந்த நடவடிக்கையால் கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த மற்றும் கூட்டு சிகிச்சையை உறுதிசெய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு