தேசிய செய்திகள்

குஜராத்தில் 13 பேருடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது; 16 வயது சிறுவன் பலி

குஜராத்தில் மஹிசாகர் ஆற்றில் 13 பேருடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 16 வயது சிறுவன் பலியானான். #BoatCapsize

தினத்தந்தி

கேடா,

குஜராத்தின் கேடா மாவட்டத்தில் தகோர் பகுதியருகே மஹிசாகர் ஆற்றில் 13 பேருடன் படகு ஒன்று சென்றது. படகில் பயணித்தவர்கள் கொட்லிண்டோரா கிராம மக்கள். அவர்கள் ஆற்றின் மறுகரையில் உள்ள பவகாத் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் படகு ஆற்றில் கவிழ்ந்ததில் அதில் பயணித்த 16 வயது சிறுவன் பலியானான்.

அவன் ஹர்திக் சவ்டா என அடையாளம் காணப்பட்டு உள்ளான். படகில் இருந்த மற்ற 12 பயணிகளும் ஆற்றில் நீந்தி கரை சேர்ந்தனர். காயமடைந்த அவர்கள் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்