தேசிய செய்திகள்

இம்பாலில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் பச்சிளங்குழந்தை உடல் கண்டெடுப்பு

இம்பாலில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் பச்சிளங்குழந்தை உடல் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து கவுகாத்தி வழியாக டெல்லி சென்ற ஏர் ஏசியா விமானத்தில், பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளங்குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்தின் கழிவறையில் கிடந்த குழந்தையின் உடலைக்கண்ட விமான ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தையின் வாயில், கழிவறையில் பயன்படுத்தப்படும் பேப்பர் திணிக்கப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். விமான நிலைய பாதுகாவலர்களும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையின் தாயார் மைனர் பெண்ணாக இருக்க கூடும் என்று முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்