தேசிய செய்திகள்

பெங்களூரு; தனியார் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்

மின்னஞ்சல் மூலம் தனியார் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

தினத்தந்தி

பெங்களூரு ,

கர்நாடக மாநிலம் பெங்களூரு டிரினிட்டி சர்க்கிள் பகுதியில் உள்ள எச்எஸ்பிசி(HSBC) வங்கிக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து வங்கியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்நிலையில் மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து வங்கி ஊழியர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்தனர்.

இது குறித்து பெங்களூரு கிழக்கு பிரிவு டிசிபி கூறுகையில்;

சோதனையில் சந்தேகப்படும்படியாக எதுவும் கிடைக்கவில்லை, அது போலியான வெடிகுண்டு மிரட்டல். மேலும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி,கல்லூரிகள் மற்றும் விமானங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.இதனால் பெங்களூருவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து