தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தின் சிறப்புக்கூட்டம் கடந்த 16 ஆம் தேதி கூடியது.

புதுடெல்லி,

நாடாளுமன்றம், சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீதம் வழங்கும் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்டவற்றை நிரப்புவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக்கூட்டம் கடந்த 16 ஆம் தேதி கூடியது. நாடாளுமன்றத்தின் முதல் நாளே இந்த மசோதாக்கல் தாக்கல் செய்யப்பட்டது.

அன்றைய தினம் நள்ளிரவு வரை விவாதம் நடைபெற்ற நிலையில், நேற்று மாலை மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த மசோதாக்களை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம் என்பதால், மசோதாக்களை எதிர்க்கட்சிகள் முறியடித்தன. இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.