தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லை வழியாக நடைபெற இருந்த போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு!

பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக கடத்த முயன்ற போதைப்பொருள் மீட்கப்பட்டது.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

இந்திய பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக சதிகாரர்கள் மேற்கொள்ள முயன்ற கடத்தல் முயற்சியை ஜம்மு எல்லை காவல் படையினர் முறியடித்தனர்.

இன்று அதிகாலை இந்திய சம்பா பகுதி எல்லை வழியாக, கடத்த முயன்ற போதைப்பொருள் மீட்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சுமார் 8 கிலோ போதைப்பொருள் ஹெராயின் ஆக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் கடத்தல் முயற்சியில் ஈடுபட முயன்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு பாகிஸ்தானிய கடத்தல்காரன் பாதுகாப்பு படை வீரர்களால் சுடப்பட்டான்.

ஆனால் அவன் மீண்டும் பாகிஸ்தான் பக்கம் ஊர்ந்து சென்றுவிட்டதாக தெரிகிறது. எனினும் கடத்தல்காரனின் இரத்தக் கறை அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு