தேசிய செய்திகள்

8 மாதங்களில் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை - மத்திய மந்திரி தகவல்

8 மாதங்களில் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவையாக மாற்றப்படும் என்று மத்திய மந்திரி தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவின் அரசு தொலைதொடர்பு நிறுவனமாக பி.எஸ்.என்.எல். உள்ளது. கடந்த மாத இறுதியில் நாடு முழுவதுமாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அதிவேக இணையவசதியை பெறுவதற்கான 4ஜி சேவை அமல்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் அடுத்த 8 மாதங்களில் அனைத்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அனைத்து 4ஜி செல்போன் கோபுரங்களும் 5ஜியாக மாற்றப்பட உள்ளது. இதுதொடர்பாக தொலைதொடர்பு மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் நடந்த பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தொலைதொடர்பு சீர்திருத்தத்தை மேற்கொள்ள உள்ளோம். அதன்படி அடுத்த 6 முதல் 8 மாதங்களில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 4ஜி செல்போன் கோபுரங்கள் அனைத்தும் 5ஜியாக மாற்றப்படும். இதன்மூலம் அதிவேக இணையத்தை இன்னும் சிறப்பாக அனுபவிக்க முடியும் என்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து