தேசிய செய்திகள்

மங்களூருவில் 14-வது மாடியில் இருந்து குதித்து தொழில் அதிபர் தற்கொலை

மங்களூருவில் 14-வது மாடியில் இருந்து குதித்து தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் கத்ரி போலீஸ் எல்லைக்குட்பட்ட பைந்தூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் அமீன். இவர் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் சொந்தமாக கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த சில நாட்களாக இவர் மிகவும் மன வேதனையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தான் வசித்து வரும் குடியிருப்பின் 14-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதை குடியிருப்பில் இருந்தவர்கள் பார்த்து கத்ரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கத்ரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. கடன் தொல்லையா? குடும்ப பிரச்சினையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கத்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்