தேசிய செய்திகள்

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் 2026-ம் ஆண்டுவரை நீட்டிப்பு - மத்திய மந்திரிசபை ஒப்புதல்

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தை 2026-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை தொடர மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளிதுள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து 2026-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதற்கு ரூ.15 ஆயிரத்து 471 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம், முதல்முறையாக 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது, 5-வது கட்டமாக இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த கட்டத்தில், 2030-ம் ஆண்டுக்குள் எய்ட்சை உருவாக்கும் எச்.ஐ.வி. வைரசுக்கு முடிவு கட்டும் ஐ.நா.வின் இலக்கை நிறைவேற்ற இந்தியா பாடுபடும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 27 கோடி எச்.ஐ.வி. பரிசோதனைகள் மேற்கொள்ளவும், ஆண்டுக்கு 8 கோடி பேருக்கு சிகிச்சை அளிக்கவும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு