கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

இந்திய ராணுவத்துக்கு ரூ.48,000 கோடியில் 83 தேஜஸ் போர் விமானங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்திய ராணுவத்துக்கு ரூ.48,000 கோடியில் 83 தேஜஸ் போர் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை கூடியது. இந்தக் கூட்டத்தில் 73 தேஜாஸ் எல்.சி.ஏ போர் விமானங்கள் மற்றும் 10 பயிற்சி விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

இந்நிலையில் இந்திய ராணுவத்துக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் ரூ.48 ஆயிரம் கோடி மதிப்பிலான 83 தேஜஸ் போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத் துறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து புதிய தேஜஸ் போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளன. தேஜஸ் எம்.கே-1 ஏ லைட் காம்பாட் விமானம் என்பது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் நான்காவது தலைமுறை போர் விமானம் ஆகும்.

இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டுவிட்டரில், மத்திய அமைச்சரவை, ஐ.ஏ.எஃப் இன் உள்நாட்டு போர் விமானமான எல்.சி.ஏ-தேஜாஸ் கடற்படையை வலுப்படுத்த சுமார் 48000 கோடி மதிப்புள்ள மிகப்பெரிய உள்நாட்டு பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தத்திற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் இந்திய பாதுகாப்பு உற்பத்தியில் தன்னம்பிக்கைக்கு ஒரு முக்கிய திருப்பமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு