தேசிய செய்திகள்

இலவச தரிசன டோக்கன் வழங்குவது ரத்து - திருப்பதி தேவஸ்தானம் தகவல்

ஏழுமலையானை தரிசிக்க இலவச தரிசன டோக்கன் வழங்குவது ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி,

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆந்திராவில் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவதால் அங்குள்ள அலுவலர்கள், ஊழியர்கள், அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது.

எனவே அலிபிரியில் ஸ்ரீதேவி காம்ப்ளக்சில் தினமும் 3 ஆயிரம் எண்ணிக்கையில் இலவச தரிசன (டைம் ஸ்லாட்) டோக்கன் வழங்கப்பட்டு வந்தது, அது இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் ரூ.300 டிக்கெட் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை