தேசிய செய்திகள்

நகரை அழகுபடுத்த வைத்த பூந்தொட்டியில் கஞ்சா செடி - பொதுமக்கள் அதிர்ச்சி

நகராட்சி அதிகாரிகள், கலால் துறையினர் விரைந்து வந்து கஞ்சா செடி இருந்த பூந்தொட்டியை பறிமுதல் செய்தனர்.

தினத்தந்தி

பாலக்காடு,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு நகராட்சி சார்பில், நகரில் உள்ள முக்கிய சாலைகளை அழகுப்படுத்தும் வகையில் சாலையோரம் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை நகராட்சி பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் அங்குள்ள ஒரு பூந்தொட்டியில் கஞ்சா இருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் நகராட்சி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நகராட்சி அதிகாரிகள், கலால் துறையினர் விரைந்து வந்து கஞ்சா செடி இருந்த பூந்தொட்டியை பறிமுதல் செய்தனர். 25 செ.மீ. உயரம் உள்ள கஞ்சா செடி எப்படி இங்கு வந்தது, அதன் பின்னால் செயல்பட்டது யார்? என்பது தெரியவில்லை.

இதுகுறித்து கலால்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்