தேசிய செய்திகள்

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; 4 பேர் படுகாயம்

சாகர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவமொக்கா;

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா இக்கேரி-ஆவினஹள்ளி சாலையில் நேற்றுமுன்தினம் காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் தூக்கி வீசப்பட்டு லேசான காயம் அடைந்தார்.

மேலும் காரில் வந்த தனிஷ், கைருன்னிஷா, தவ்பிக், பிதா ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள், 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்