தேசிய செய்திகள்

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; மருத்துவ மாணவர் பலி

பிரியபட்டணா அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதி கொண்ட விபத்தில் மருத்துவ மாணவர் உயிரிழந்தார்.

மைசூரு;

மைசூரு மாவட்டம் பிரியபட்டணா தாலுகா தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா ஒசமநே கிராமத்தை சோந்த நூத்தன் (வயது 19) என்ற வாலிபர் மருத்தும் படித்து வந்தார்.

இந்தநிலையில் அவர் விடுமுறை நாளான நேற்று பெட்டதபுரா கிராமத்தில் உள்ள தனது மாமா வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது பெட்டதபுராவில் இருந்து வந்து கொண்டிருந்த கார் ஒன்று, நூத்தன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பெட்டதபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்