மும்பை,
அவுரங்காபாத்தில் கடந்த 2-ந் தேதி நவநிர்மாண் சேனாவின் பொது கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, " 4-ந் தேதிக்குள் மசூதிகளில் ஒலிப்பெருக்கிகள் அகற்றப்படவில்லை என்றால், இந்துக்கள் மசூதிகளின் முன் நின்று இரு மடங்கு அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகளில் அனுமன் பாடல்களை ஒலிக்க செய்வார்கள். மசூதிகளில் இருந்து ஒலிப்பெருக்கிகளை நீக்கவில்லை எனில் அதன்பிறகு நடக்கும் சம்பவங்களுக்கு நான் பொறுப்பல்ல " என பேசியிருந்தார்.
இந்த நிலையில், அவுரங்காபாத் போலீசார் ராஜ் தாக்கரே மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இரு பிரிவினர் இடையே மோதலை தூண்டுவது உள்ளிட 4 பிரிவுகளின் கீழ் (116, 117, 153 (ஏ), எம்.பி.ஒ. 135) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜ் தாக்கரே தவிர அவுரங்காபாத் பொது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.