தேசிய செய்திகள்

கொரோனா 2-வது அலையின் போது குடும்ப வன்முறை வழக்குகள் குறைந்தது - ஸ்மிரிதி இரானி தகவல்

இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் போது குடும்ப வன்முறை வழக்குகள் குறைந்ததாக மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது குடும்ப வன்முறை தொடரான ஒரு கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

கடந்த ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியபோது, ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 3 ஆயிரத்து 748 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. ஆனால், இந்த ஆண்டு கொரோனா இரண்டாவது அலையின்போது, ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 3 ஆயிரத்து 582 குடும்ப வன்முறை வழக்குகள்தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை