தேசிய செய்திகள்

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் - டெல்லியில் நாளை நடக்கிறது

டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நாளை நடக்க உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் அடங்கிய காவிரி ஒழுங்காற்றுக்குழு அவ்வப்போது கூடி நதிநீர் பங்கீடு தொடர்பாக விவாதித்து வருகிறது. இந்த வகையில் இதுவரை 14 கூட்டங்கள் நடைபெற்று உள்ளது.

இந்தநிலையில், காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 15-வது கூட்டம் ஒழுங்காற்றுக்குழு தலைவர் நவீன்குமார் தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் 4 மாநில பிரதிநிதிகளும் கலந்து கொள்கிறார்கள்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்