தேசிய செய்திகள்

டெல்லியில் 18-ந் தேதி காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 92-வது கூட்டம் வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெற இருப்பதாக ஒழுங்காற்றுக்குழு தலைவர் வினீத் குப்தா தெரிவித்து உள்ளார். கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

ஒழுங்காற்றுக்குழுவின் 91-வது கூட்டம் கடந்த மாதம் 18-ந் தேதி நடைபெற்றது. அப்போது முதல் தற்போது வரை மழைப்பொழிவு இருந்து வருவதால் தண்ணீர் திறப்பு பற்றி பெரிய அளவில் விவாதம் இல்லை. அதிகாரிகளின் பரிந்துரைப்படி உரிய தண்ணீர் திறக்கப்படுவதாக தெரிகிறது. இந்த நிலையில் 92-வது கூட்டம் நடைபெற இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது