தேசிய செய்திகள்

‘செல்போன் ஒட்டுக்கேட்பு தனியுரிமையை மொத்தமாக மீறிய செயல்’ - மத்திய அரசு மீது அகிலேஷ் யாதவ் தாக்கு

‘செல்போன் ஒட்டுக்கேட்பு தனியுரிமையை மொத்தமாக மீறிய செயல் என்று மத்திய அரசு மீது சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தாக்கும் வகையில் பேசியுள்ளார்.

தினத்தந்தி

லக்னோ,

இஸ்ரேல் நாட்டின் உளவு மென்பொருளான பெகாசஸ்-ஐ பயன்படுத்தி இந்தியாவில் முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஓட்டுக்கேட்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதை மத்திய அரசு மறுத்துள்ளது.

இந்த நிலையில், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், சிலரின் தனிப்பட்ட செல்போன் உரையாடல்களை ஒட்டுக்கேட்டது, ஒட்டுமொத்தமாக தனியுரிமையை மீறிய செயல்.

போன்களை உளவு பார்ப்பது ஜனநாயகத்தில் குற்றச்செயல். பா.ஜ.க. இதைச் செய்திருந்தால், தண்டிக்கத்தக்கது. ஒருவேளை இதுபற்றி தங்களுக்கு தெரியாது என்று பா.ஜ.க. அரசு கூறுமானால், தேசிய பாதுகாப்பில் அவர்களின் தோல்வியை இது காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்