தேசிய செய்திகள்

இங்கிலாந்துக்கு ஏற்றுமதிக்காக தயாரான 50 லட்சம் தடுப்பூசிகளை உள்நாட்டில் பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

இந்த நிலையில் புனேயில் உள்ள சீரம் நிறுவனம் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்காக 50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை தயாரித்து இருந்தது. ஆனால் நாட்டில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்த தடுப்பூசிகளை உள்நாட்டிலேயே பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறு சீரம் நிறுவனம் மத்திய சுகாதாரத்துறைக்கு சமீபத்தில் கடிதம் எழுதியது.

இதைத்தொடர்ந்து இந்த தடுப்பூசிகளை உள்நாட்டிலேயே பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பயன்படுத்திக்கொள்ள மேலும் 50 லட்சம் டோஸ்கள் தயாராக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதில் சில மாநிலங்களுக்கு தலா 3 லட்சம் டோஸ்களும், பிற மாநிலங்களுக்கு தலா 1 லட்சம் டோஸ்களும், 2 மாநிலங்களுக்கு தலா 50 ஆயிரம் டோஸ்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இந்த தடுப்பூசிகளில் கோவிஷீல்டு என்பதற்கு பதிலாக அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி என பெயரிடப்பட்டிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?