தேசிய செய்திகள்

சிறுமிகளுக்கு இலவச எச்.வி.பி தடுப்பூசி வழங்க மத்திய அரசு திட்டம்

ஒருமுறை செலுத்தப்படும் இந்த தடுப்பூசி, எச்.வி.பி வகைகளில் இருந்து பாதுகாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கருப்பை வாய் புற்​று​நோயைத் தடுக்​கும் ஒரு முக்​கிய முயற்​சி​யாக, 14 வயது மற்​றும் அதற்கு மேற்​பட்ட வயதுடைய சிறுமிகளுக்​கான நாடு தழு​விய ஹியூமன் பாப்​பிலோமா வைரஸ் (எச்​பி​வி) தடுப்​பூசி பிரச்​சா​ரத்தை மத்​திய அரசு விரை​வில் தொடங்க உள்​ளது. இதன்​படி கார்​டசில் தடுப்​பூசி இலவச​மாக வழங்​கப்​படும்.

இந்​தத் தன்​னார்​வத் திட்​டம் வரும் வாரங்​களில் நாடு முழு​வதும் செயல்​படுத்​தப்பட உள்​ளது. உயிருக்கு ஆபத்​தான இந்த நோய்க்​கான எதிர்ப்​புச் சக்​தியை அனை​வருக்​கும் சமமாக விரிவுபடுத்​து​வது, பெண்​களைப் பாதிக்​கும் பொது​வான புற்​று​நோய்​களில் ஒன்​றான இதற்கு எதி​ரான இந்​தி​யா​வின் போராட்​டத்தை வலுப்​படுத்​து​வது ஆகிய​வை​தான் இந்த திட்​டத்​தின் நோக்​கம் ஆகும்.

உலகின் 160 நாடுகளில் நடைமுறையில் உள்ள திட்டத்தில் இந்தியாவும் இணைகிறது. இந்த திட்டம் தமிழகத்தில் கடந்த ஜனவரி 27ம் தேதி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.