கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

நேரடி வரிகள் வாரிய தலைவர் பதவிக்காலம் 9 மாதம் நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு

நேரடி வரிகள் வாரிய தலைவரின் பதவிக்காலத்தை மேலும் 9 மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

வருமானவரித்துறையை உள்ளடக்கிய உச்ச கொள்கை வகுக்கும் அமைப்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் உள்ளது. 6 உறுப்பினர்களை கொண்ட இந்த வாரியத்தின் தலைவராக நிதின் குப்தா (வயது 60) உள்ளார்.

1986-ம் ஆண்டு பிரிவு இந்திய வருவாய்ப் பணி அதிகாரியான நிதின் குப்தா, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார்.

நிதின் குப்தா நேற்று (சனிக்கிழமை) ஓய்வுபெறவிருந்த நிலையில், அவருக்கு மேலும் 9 மாத காலம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் அவரை மறுநியமனம் செய்வதற்கு மத்திய மந்திரிசபையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

நிதின் குப்தா, அடுத்த ஆண்டு ஜூன் 30-ந்தேதி அல்லது மறுஉத்தரவு வரும் வரை மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவராக இருப்பார்.

மத்திய அரசின் செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து