தேசிய செய்திகள்

பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம்: இஸ்ரோ

பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

சந்திரயான்-2 திட்டம் கடைசி கட்டத்தில் பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில், இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தற்போதைய பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம் சந்திரயான் 2 திட்டத்தின் நோக்கத்தில் 90 முதல் 95 சதவீத பணிகளை எட்டிவிட்டோம்.

முந்தைய திட்டங்களை ஒப்பிடும் போது சந்திரயான்- 2 வில் மிகப்பெரிய தொழில்நுட்ப முன்னேற்றத்தை பெற்றிருக்கிறோம். சந்திரயான் 2 ஏவப்பட்டதில் இருந்து அதன் ஒவ்வொரு நிகழ்வையும் உலக நாடுகள் உற்று நோக்கி கொண்டு இருந்தன. நிலவின் சுற்று வட்டப்பாதையில் திட்டமிட்டபடி ஆர்பிட்டர் சுற்றிக்கொண்டு இருக்கிறது. ஆர்பிட்டர் மூலம், நிலவை பற்றி ஆய்வு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்