தேசிய செய்திகள்

மைசூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் - தென்மேற்கு ரெயில்வே

பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

தென்மேற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெங்களூரு கிழக்கு மற்றும் பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ரெயில்வே பாலங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன்காரணமாக மைசூரு- டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் 'காவேரி' தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16022) இன்று (திங்கட்கிழமை), நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் பெங்களூரு கிழக்கு, பங்களூரு கன்டோன்மென்ட் ரெயில் நிலையங்கள் வழியாக செல்வதற்கு பதிலாக கே.எஸ்.ஆர். பெங்களூரு, யஷ்வந்தபுரம், பானசவாடி, பையப்பனஹள்ளி, கே.ஆர்.புரம் வழியாக இயக்கப்படும்.

இதேபோல் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-மைசூரு 'காவேரி' தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16021) இன்று, நாளை மற்றும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கே.ஆர்.புரம், பையப்பனஹள்ளி, பானசவாடி, யஷ்வந்தபுரம் வழியாக கே.எஸ்.ஆர். பெங்களூரு ரெயில் நிலையத்தை வந்தடையும். அதாவது பெங்களூரு கிழக்கு மற்றும் பெங்களூரு கன்டோன்மென்ட் ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக செல்லாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு