தேசிய செய்திகள்

காஷ்மீரில் உள்ள வைஷ்ணவிதேவி கோவிலில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வழிபாடு

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வைஷ்ணவிதேவி கோவிலுக்கு வந்து சாமிதரிசனம் செய்து வழிபட்டார்.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் புகழ்பெற்ற வைஷ்ணவிதேவி குகைக்கோவில் உள்ளது. கத்ரா பயணம் மேற்கொண்டுள்ள சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நேற்று இந்த கோவிலுக்கு வந்து சாமிதரிசனம் செய்து வழிபட்டார்.

கோவிலுக்கு வந்த அவரை, கோவில் மூத்த நிர்வாக அதிகாரி வரவேற்று அழைத்து சென்றார். நீதிபதியுடன், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியும் சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட தலைமை நீதிபதி அருகில் உள்ள பைரன் பாபா கோவிலிலும் வழிபாடு செய்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை