தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவிக்கு 3 பெண் நீதிபதிகள் பரிந்துரை தகவல் - தலைமை நீதிபதி வருத்தம்

நீதிபதிகளை நியமிக்கும் செயல்முறை புனிதமானது மற்றும் அதனுடன் குறிப்பிட்ட கண்ணியம் உள்ளது என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி ரமணா வருத்தம்

தினத்தந்தி

புதுடெல்லி:

இந்திய தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலீஜியம்) மூன்று பெண் நீதிபதிகள் உள்பட ஒன்பது நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

தற்போது, சுப்ரீம் கோர்ட்டில் ஒன்பது நீதிபதிகள் பற்றாக்குறை உள்ளது, ஏனெனில் கடந்த ஓரிரு வருடங்களில் பல நீதிபதிகள் ஓய்வு பெற்றனர், சமீபத்தில் நீதிபதி ரோஹிண்டன் பாலி நாரிமன் ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவிக்கு கர்நாடக ஐகோர்ட் நீதிபதி பி.வி. நாகரத்னா, தெலங்கானா ஐகோர்ட் தலைமை நீதிபதி ஹிமா கோலி மற்றும் குஜராத் ஐகோர்ட் நீதிபதி பெலா திரிவேதி ஆகிய மூன்று பெண் நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என இன்று செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் புதிய நீதிபதிகள் குறித்த சுப்ரீம் கோர்ட் கொலீஜியத்தின் பரிந்துரைகள் குறித்த ஊடக செய்திகள் மிகுந்த மன வருத்தத்தை அளிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி ரமணா தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நீதிபதிகளை நியமிக்கும் செயல்முறை புனிதமானது மற்றும் அதனுடன் குறிப்பிட்ட கண்ணியம் உள்ளது. ஊடக நண்பர்கள் இந்த செயல்முறையின் புனிதத்தை புரிந்துகொண்டு அங்கீகரிக்க வேண்டும்

பொறுப்பற்ற அறிக்கையினால் தகுதியுள்ள நபர்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் உள்ளன. நான் மிகவும் வருத்தப்படுகிறேன். பெரும்பாலான மூத்த பத்திரிகையாளர்கள் முதிர்ச்சி மற்றும் பொறுப்பை நான் பாராட்டுகிறேன் என கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்