தேசிய செய்திகள்

புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் கொடியேற்றினார் முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் முதல்-மந்திரி ரங்கசாமி கொடியேற்றி வைத்து விடுதலை நாள் விழாவை தொடங்கி வைத்தார்

புதுச்சேரி,

பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி விடுதலையானது. இந்நிலையில், புதுச்சேரி விடுதலை நாளையொட்டி, புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம், கவர்னர் மாளிகை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், கடற்கரை சாலை, பாரதி பூங்கா ஆகியவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மேலும், முதல்-மந்திரி ரங்கசாமி புதுச்சேரி கடற்கரை சாலையில் தேசியக்கொடியை ஏற்றி விடுதலை நாள் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். விடுதலை நாள் கொண்டாட்டத்தில் நடந்த காவல்துறை அணிவகுப்பு மரியாதையையும் முதல்-மந்திரி ரங்கசாமி ஏற்றுள்ளார்.

கொடியேற்றிய பின் முதல்-மந்திரி ரங்கசாமி கூறியாதாவது :-

'புதுச்சேரியில் 70 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் எந்தவித அச்சமும் தயக்கமும் இல்லாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். புதுச்சேரியில், போதுமான அளவு தடுப்பூசிகள் இருப்பதால், மக்கள் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களின் வளர்ச்சியில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. எனது தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற 6 மாத காலத்தில் பல்வேறு திட்டப்பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி, 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து ஆதிதிராவிட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.500 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேலும், வேளாண் தொழிலில் காணப்படும் வேலையாட்கள் பற்றாக்குறையை இயந்திரமயமாக்கல் மூலம் ஈடுகட்ட அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது, அரசு துறைகளில் காலியாக உள்ள 10,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். புதுச்சேரியில் கனமழையினால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் 8-ந்தேதி புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்படும். மூடப்பட்டுள்ள கூட்டுறவு நியாய விலைக்கடைகளை திறந்து பொது விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தரும் விதத்தில் சுற்றுலா உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். பண்டிகைகள் வருவதால் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு