கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

நடுவானில் பறந்த விமானத்தில் குழந்தைக்கு மாரடைப்பு - நாக்பூரில் அவசரமாக தரையிறக்கம்

பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானத்தில் பயணம் செய்த இருதய பிரச்சினை உள்ள 14 மாத குழந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

மும்பை,

பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு நேற்று முன்தினம் இரவு விமானம் ஒன்று சென்றது. விமானத்தில் இருதய பிரச்சினை உள்ள 14 மாத குழந்தையும் பயணம் செய்தது. திடீரென அந்த குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மேலும் அந்த குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கியது. இதனால் குழந்தையின் பெற்றோர் பதற்றம் அடைந்தனர். செய்வது அறியாமல் திகைத்து நின்றனர்.

உடனடியாக விமானத்தில் பயணம் செய்த டாக்டர்கள் சிலர் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் விமானமும் அவசரமாக நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில் தயாராக நின்ற ஆம்புலன்ஸ் மூலம் குழந்தை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் நாக்பூர் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்