தேசிய செய்திகள்

எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக சீனா குற்றச்சாட்டு; இந்தியா நிராகரிப்பு

இந்திய சீன எல்லையில் இந்தியப் படைவீரர்கள் சீன பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக சீனா குற்றம் சாட்டியது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப்பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில், லடாக், சிக்கிம் பகுதியில் இந்தியப் படைவீரர்கள் அத்துமீறி சீன பகுதியில் நுழைந்ததாக சீனா குற்றம் சாட்டியது.

இந்த குற்றசாட்டை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.

இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறும்போது, அசல் கட்டுப்பாட்டு கோடுதான் இரு தரப்பு எல்லையாக இருந்து வருகிறது. இந்தியப்படையின் சாதாரண ரோந்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் சீனத்தரப்புதான் ஈடுபட்டுள்ளது. இந்திய தரப்பில் எல்லை தாண்டி சென்றனர் என்று கூறுவது சரியானது அல்ல. எல்லையில் இந்தியத்தரப்பு கட்டுப்பாட்டினை கடைப்பிடிக்கிறது என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்தியாவின் இறையாண்மையையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதில் நாங்கள் உறுதிகொண்டுள்ளோம் என்றும் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து